சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு முல்லை நகரை சேர்ந்தவர் சுகுமாரன்- சுலோசனா. இவர்களது மகன் ஜெகநாதன்(26). பெரம்பலூர் சங்கு அருகில் கேஸ் வெல்டிங் தொழிலாளியான ஆலத்தூர் வட்டம் புதுவிராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து செல்வமனி ஆகியோரது மகள் மாலினி(19). பெரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார்.